Monday, July 03, 2006

திருமலைத் திருடன்

சரித்திர நவீனம் - ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் திருப்பதியின் திருமலையில் ஏற்பட்ட சர்ச்சையின் அடிப்படியினை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டது.

நின்ற நிலையில் மலையில் காட்சி தந்து தன்னைத் தேடி வரும் பக்தர்கள் அனைவரையும் காத்து ரட்சித்து அவர்கள் கோரும் வரங்கள் அனத்தையும் வாரி வழங்கும் வள்ளல் அந்த திருவேங்கடவன். அவன் யார்? சிவனா? பெருமாளா? என்ற கலவரம் தோன்றிய ஒரு கட்டத்தில், சைவர்களும் வைணவர்களும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டபோது வைணவப் பெரியாரான உடையவர் ராமானுஜர் திருமலை ஏறிச் சென்று அந்த திருவேங்கடவன் சாட்சாத் திருமால்தான் என்று வைணவத்தை நிலை நாட்டியதாக சரித்திர சான்றுகள் தெரிவிக்கின்றன.

அந்த கால சோழர்களின் ஆட்சி, சாளுக்கியர்களின் அதிகார அத்துமீறல், மதங்களுக்குள் உள்ள போட்டி மனப்பான்மை
வேங்கடவன் கோவில் எப்படி தோன்றையது - இத்த்கைய வரலாறுகளின் திரட்டலோடு, திருவேங்கடவன் அருள் கொண்டு எழுதப்பட்ட புதினம்தான் 'திருமலைத் திருடன்'.

இப் புதினத்திற்கு மதிப்புரை வழங்கி கெளரவித்தவர் முனைவர் திரு சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள்.

பெரியவர்கள் பலர் படித்து பாராட்டியுள்ளார்கள். அவர்களின் ஆங்கிலக் கடிதங்களை இந்தப் பகுதியில் பார்க்கலாம்.

எல்லோருடைய மதிப்புக் கட்டுரைகளும் வரவேற்கப்படுகின்றன.

பிரதிகளுக்கு : திவாகர்,வி. (vdhivakar@rediffmail.com)
நர்மதா பதிப்பகம்,10, நாநா தெரு, தி.நகர், சென்னை - 17.

0 Comments:

Post a Comment

<< Home